1 1 16
இலங்கைசெய்திகள்

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம்

Share

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம்

நடிகர் அஜித் – மகிழ் திருமேனி – லைகா நிறுவனம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

விடாமுயற்சி ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் தழுவல் என கூறப்பட்டு வந்தது. அப்படத்தின் உரிமையை வாங்காமல், விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார்கள் என்றும், இதனால் அந்த ஹாலிவுட் நிறுவனம் ரூ. 150 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டது என்று பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியுள்ளார்.

இதில் “லைகா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, பிரேக் டவுன் படத்திற்கான உரிமையை வாங்கிட்டோம், அதற்கான தொகை எவ்வளவு என்று அவர்கள் கூறவில்லை. இந்த கதை துவங்கும்பொழுது, இன்ஸ்பிரேஷனாக தான் ஆரம்பித்துள்ளது.

பின் பல காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்ததன் காரணமாக, லைகா நிறுவனம் அந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி, அப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். இந்த ரூ. 150 கோடி வழக்கு என வெளிவரும் செய்திகள் அனைத்துமே பொய்” என கூறியுள்ளார். இதன்மூலம், விடாமுயற்சி உரிமை குறித்து பரவிய வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...