3 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Share

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால், அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் காரணமாக குறித்த மாணவர்கள், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவ்வாறன சூழ்நிலைகளில் திணைக்கள அதிகாரிகள் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...