tamilni 113 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து முறைக்கேடுகளை அறிவிக்க புதிய வசதி

Share

தனியார் பேருந்து முறைக்கேடுகளை அறிவிக்க புதிய வசதி

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் ‘வோக்கி டோக்கி’ அலைபேசி முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இரண்டு வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து தனியார் பேருந்துகளிலும் குளோபல் பொசிஸினிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) பொருத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உணரும் பயணிகள் பேருந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது தேசிய போக்குவரத்து ஆணையத்தில் தங்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

இது துன்புறுத்தல்கள், திருட்டுகள், வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் தவறான நடத்தை மற்றும் பேருந்துகளில் நடக்கும் பல்வேறு சட்டவிரோத செயல்களைக் குறைக்க உதவும்.

அத்துடன் பயணிகளுக்கு சுதந்திரமான பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை இது கொடுக்கும் என்றும் கெமுன விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...