17 17
இலங்கைசெய்திகள்

பாதாள உலக தலைவரின் இறுதிச் சடங்கில் அநுர…! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Share

மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கலந்து கொண்டதாகக் கூறும் படத்தைப் பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பதில் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் கடந்த 2020.08.20ஆம் திகதி காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத்திட்டமொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறைக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரன் ‘மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் புகைப்படம் ஒன்று முகப்புத்தம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த படத்தை பகிர்ந்த முகப்புத்தக கணக்கு குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம், பதில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தரங்க லக்மால் என்ற நபரால் இந்தப் படம் முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டதாகவும் அரசாங்கத தகவல் திணைக்களம் பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...