rtjy 84 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் மயமாகவுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

Share

தனியார் மயமாகவுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயமாக்குவதற்கான விருப்பங்களை இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சாத்தியமான முதலீட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ், டாடா சன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்றவைகளுடன் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.

இந்தியா, பங்களாதேஸ் மற்றும் நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் வீரபெருமாள் இரவீந்திரன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின்போது இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்வரும் குளிர்கால கால அட்டவணையின் போது கொழும்பு மற்றும் திருவனந்தபுரம் இடையிலான தனது சேவைகளை வாரத்திற்கு ஆறு தடவைகளில் இருந்து ஏழு தடவையாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த மாதங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான போக்குவரத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 4
இலங்கைசினிமாசெய்திகள்

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்… கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளம் ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு காதல் பொங்க ஒளிபரப்பாகி வருகிறது...

Untitled 1 Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

ட்ரெண்டிங்கில் முத்த மழை பாடல்.. பாடகி சின்மயி அழகிய ஸ்டில்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி...

Untitled 1 Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

20 வருடத்தை எட்டிய விக்ரமின் அந்நியன்.. படம் செய்துள்ள மொத்த வசூல்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்கள் இயக்கி மக்களை வியக்க வைத்தவர் ஷங்கர். இவரது...

Untitled 1 Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

பளார் விட்டு கதிரிடம் குணசேகரன் கூறிய விஷயம், தர்ஷன் நிலைமை?.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கி மக்களால் கவனிக்கப்பட்ட பிரபலமாக மாறியவர் திருச்செல்வம்....