10 43
இலங்கைசெய்திகள்

தனியார்துறை சம்பள அதிகரிப்பு: அரசாங்க திட்டம் குறித்து அதிருப்தி

Share

தனியார்துறை சம்பள அதிகரிப்பு: அரசாங்க திட்டம் குறித்து அதிருப்தி

தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி, அதிருப்தி தெரிவித்துள்ளது.

அத்தகைய அதிகரிப்பு தற்போது சாத்தியமில்லை என்று இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி கூறியுள்ளது.

சம்பள உயர்வைச் செயல்படுத்துவதற்கு முன்னர், வணிகங்கள் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவை என்று சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயமாகும்.

எனினும், தனியார் துறையையும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறும்போது, அது தொடர்பில் அரசாங்கம் சிந்திப்பது சிறப்பாக இருக்கும் தனியார்துறை சம்பளத்தை 21,000 ரூபாயாக ஆக உயர்த்தும்போது, அங்கே 6,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது.

அத்துடன் 50-60 மணிநேரங்களுக்கு மேலதிக நேரக்கொடுப்பனவுகள் உள்ளன.

இதன்போது, ஒரு மணி நேரத்திற்கு 210 ரூபாயை செலுத்தப்படுகிறது.

எனவே 15,000 அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோருவது,தொழில்முனைவோராகிய தமக்கு மிகவும் கடினமான விடயம் என்றும் டானியா அபேசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...