5 42
இலங்கைசெய்திகள்

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Share

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (25) குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 4 பெண் கைதிகளும் 385 ஆண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

நாடு முழுவதிலும் அமைந்துள்ள பல்வேறு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள், திட்டமிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

குறிப்பாக சிறு குற்றச் செயல்களுக்கு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கும் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...