14 5
இலங்கைசெய்திகள்

கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை

Share

கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்களின் போது தடுப்பு காவலில் உள்ள கைதிகள் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் இது தொடர்பிலான வழிகாட்டல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றில் இது தொடர்பிலான மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகளின் உரிமைகளுக்காக சுதேஷ் நந்திமால் டி சில்வா என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து கைதிகளும் மனிதர்கள் என கருதப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு நபரும் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவர் குற்றமற்றவர் என கருதப்பட வேண்டும் எனவும் அவருக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 89 ஆம் சரத்தின் பிரகாரம் வாக்களிப்பதற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற கைதிகள் யார் என்பதை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் கைதிகள் வாக்களிப்பதற்கு ஓர் பொறிமுறை உருவாக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்கு தகுதியான கைதிகள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழிகாட்டல்களை வெளியிட வேண்டும் என மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...