24 664ad6d0ca45d
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

Share

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கமானது சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையானது இன்று (20) முதல் மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்த சம்பளத்தை 25,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து, சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.ஏ.டி.சுரஞ்சீவ (T.A.D. Suranjeeva ) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...