25 6848f357eab31
இலங்கைசெய்திகள்

அநுர அரசியல் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

Share

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பல மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் சிறையில் நடந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “இந்த சம்பவங்கள் அனுராதபுரம் சிறையில் மட்டுமல்ல. வேறு பல சிறைகளிலும் நடந்துள்ளன.

எனவே, அனைத்து சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பதிவுகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் முடிவடையும் நேரத்தில் மேலும் பல சிறை அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...