பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி கைதி ஒருவர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் நாளை (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.