சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள்
இலங்கையில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் மதத் தலைவர்களால் தடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 2015ஆம் ஆண்டு தான் நீதியமைச்சராக இருந்த போது மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறிப்பாக தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வழக்குகளில் பரிந்துரை செய்தேன்.
இதனையடுத்து, இது தொடர்பில் யோசனை முன்மொழியப்பட்டு ஆலோசனைகளும் நடந்தன.
எனினும், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படுவதை மதத் தலைவர்கள் எதிர்த்தனர்.
ஆனால், தற்போது இந்த யோசனையானது, அவசர யோசனையாக அறிமுகப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.