17 14
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.

தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், உங்களின் ஆதரவினால் நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள் என கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய போது எனது திட்டத்தை நம்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

என்னுடன் இணைந்து கொண்டு நீங்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு நன்றி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தம்முடன் இணைந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

தமது பயணத்தில் இடையில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக கூறியுள்ளார்.

இதுவரையில் இணைந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது பயணத்தில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக உங்களது அர்ப்பணிப்பு மற்றும் சரியான தீர்மானம் எடுப்பதற்கான உங்களது தைரியத்திற்காக நான் இறுதியாக நன்றி பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி தங்களது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த விசேட முகநூல் பதிவினை இட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...