இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

17 14
Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.

தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், உங்களின் ஆதரவினால் நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள் என கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய போது எனது திட்டத்தை நம்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

என்னுடன் இணைந்து கொண்டு நீங்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு நன்றி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தம்முடன் இணைந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

தமது பயணத்தில் இடையில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக கூறியுள்ளார்.

இதுவரையில் இணைந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது பயணத்தில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக உங்களது அர்ப்பணிப்பு மற்றும் சரியான தீர்மானம் எடுப்பதற்கான உங்களது தைரியத்திற்காக நான் இறுதியாக நன்றி பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி தங்களது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த விசேட முகநூல் பதிவினை இட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...