25 11
இலங்கைசெய்திகள்

108 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Share

108 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி இலங்கை ஆளுநரால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தவறான விசாரணையைத் தொடர்ந்து, 1915 ஜூலை 7 இல், தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு (Diyunuge Edward Henry Pedris) ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

108 ஆண்டுகளுக்கு முன்னர், காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு, மன்னிப்பு வழங்குவது தொடர்பில், 2023 இல் இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

முன்னதாக,1915இல், 27 வயதான பெட்ரிஸ், இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

கலவரங்களில் பங்கேற்று அரசுக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பல முறையீடுகள் இருந்தபோதிலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், 1915 ஜூலை 7 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...