25 11
இலங்கைசெய்திகள்

108 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Share

108 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி இலங்கை ஆளுநரால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தவறான விசாரணையைத் தொடர்ந்து, 1915 ஜூலை 7 இல், தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு (Diyunuge Edward Henry Pedris) ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

108 ஆண்டுகளுக்கு முன்னர், காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு, மன்னிப்பு வழங்குவது தொடர்பில், 2023 இல் இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

முன்னதாக,1915இல், 27 வயதான பெட்ரிஸ், இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

கலவரங்களில் பங்கேற்று அரசுக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பல முறையீடுகள் இருந்தபோதிலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், 1915 ஜூலை 7 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...