tamilnaadi 139 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது

Share

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது

ஜனாதிபதித் தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொதுக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் அது நடந்தாக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடவே முடியாது. இந்த விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது. எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபரில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அழைப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும்.

தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழேயே தேர்தல் நடக்கும். அதில் மாற்றம் வராது. அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைவிட பலமானதொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டுக்குத் தேவை என்பது எனது கருத்தாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைப்பாடு அல்ல. அப்படியானதொருவர் என நினைத்துத்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தோம். ஆனால், அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...