23 64f75a991e97a
இலங்கைசெய்திகள்

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

Share

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

என்னைப் பொறுத்த வரையில் அதிபர் தேர்தல்தான் முதலில் நடைபெறும் என பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று (09.04.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைளயில், சில நேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்.

நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்.

இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த அதிபர் தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் எவ்வாறான நிலைமைகள் வரும்போதும் நாம் அதனைச் சந்திக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மயிலத்தமடு மாதவனை விவகாரங்களில் பிள்ளையான் பாராமுகமாக செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...