tamilni 582 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

Share

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளாராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆதரவற்றவர் எனவும் இதனை அவர் நன்கு அறிந்திருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளையும் தனது கட்சி முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் ஆதரவற்ற தற்போதைய ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தான் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், இது கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்து அல்ல எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...