24 661f5fa998081
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித் தரப்பு ஆதரவை பெற தொடர்ந்து முயலும் ரணில்

Share

சஜித் தரப்பு ஆதரவை பெற தொடர்ந்து முயலும் ரணில்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுத்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மேற்கொள்ளும் முயற்சி வெற்றியளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஓரிருவர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் மூலம் எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும் உறுப்பினர்களைக் கூடிய விரைவில் தம்வசம் இழுப்பதற்கான வழிகள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena), சாகல ரத்னாயக்க (Sagala Ratnayaka), ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...