அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!
இலங்கைசெய்திகள்

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!

Share

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்!

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளூராட்சி மன்ற முறைமையில் தற்போது காணப்படுவதை விட, பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.

8715ஆகக் காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5000ஆக குறைக்குமாறு கூறப்பட்ட நிலையில், இவர்களால் இரு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு சுமார் 4900ஆக தொகுதிகள் குறைக்கப்பட்டதையடுத்து, பல பிரதேசங்களை இணைப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால், இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படும்.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதனை நடைமுறைப்படுத்தினால் நல்லிணக்கத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, குறித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை நாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இலிருந்து 5000 – 4000 வரை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனவே, விரைவில் இது தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். தற்போதுள்ள முறைமையில் தேர்தலை நடத்தி 8000 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டால், அதுவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பே தவிர, புதிய பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதல்ல.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...