5 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், தமது கொள்கையை அறிவிப்பதற்காக சங்க மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசியல் செல்வாக்கு இல்லாத குறைந்தது 5,000 பௌத்த பிக்குகள் பங்கேற்கும் சங்க மாநாடு எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.

“சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க (AKD) ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் கொள்கைகளை மகா சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும்.

பொதுமக்களை இலக்காகக் கொண்டு, நிலைமை மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் இந்த தலைவர்கள் அடிக்கடி பல்வேறு கொள்கைகளை அறிவிக்கின்றனர்.

எனவே, பிரதான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்து, பொதுக் கொள்கையொன்றை பிரகடனப்படுத்தி, புதிய ஜனாதிபதி தொடர்பில், மக்கள் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க பொதுபலசேனா உதவவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...