tamilni 265 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

Share

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடனேயே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். அதனை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அவரால் மாயாஜாலம் செய்ய முடியாது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

ரணில் விக்ரமசிங்க நான்கு வருடங்கள் பிரதமராக இருந்தார். ஆனால் ஒரு தடவைக் கூட அவரால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்த முடியவில்லை அல்லவா? குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவருக்கு தனது ஆசனத்தையேனும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை அல்லவா..

ஆகவே மக்கள் சார்பாக நாங்கள் எடுத்த தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் திறன்களை மதிப்பிடாமல் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...