குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!

Share

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!

குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றும் இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பியிடம் உறுதியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் தமிழரின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது, அங்கு பொங்கலிட்டு வழிபட குருந்தூர்மலை விகாரை பிக்குவும் கும்பல் ஒன்றும் தடை ஏற்படுத்தியது.

நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்த இவர்களின் செயலுக்குப் பொலிஸார் துணை நின்றிருந்தனர்.

பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழேயே இது முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சித்தார்த்தன் நேற்று (18.07.2023) ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதன்போதே இந்த விடயம் குறித்து முறைப்பாட்டை முழுமையாக தருமாறும், அந்தப் பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...