9 48
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு பயணங்களுக்காக அதிக நிதியை செலவிட்ட ஜனாதிபதி ஒருவரின் விபரம் வெளியானது

Share

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான மொத்த செலவினங்களை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), வெளியிட்டுள்ளார்.

இந்த விபரங்கள், பல ஆண்டுகளாக ஜனாதிபதிகளின் பயணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதிச் செலவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகளின் விபரங்களை அவர் பட்டியலிட்டார்.

இதன்படி, மகிந்த ராஜபக்ச (2010–2014): 3,572 மில்லியன் ரூபாய்

மைத்ரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபாய்

கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்

ரணில் விக்ரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபாய்

அநுர குமார திசாநாயக்க (செப்டம்பர் 2024–பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபாய் என்ற அளவில் செலவிடப்பட்டுள்ளது.

குறித்த விபரங்களின்படி, 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச செலவு 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களால், இலங்கை அரசுக்கு 1,144 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...