இலங்கைசெய்திகள்

கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்

tamilni 69 scaled
Share

கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலாக நடத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாதது தொடர்பில் வினவியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு கட்டடத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் வழங்கிய பணிப்புரைகளை நடைமுறைப்படுத்த தபால் மா அதிபர் இணங்காவிட்டால், மற்றுமொருவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி, தபால் மா அதிபருக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...