அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
இலங்கைசெய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Share

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், எதிர்வரும் புதன்கிழமை (26.07.2023) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் மூத்த அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் முழுமையான அதிகாரப் பிரிவினைக்கு இணங்கினால் மட்டுமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....