tamilni 437 scaled
இலங்கைசெய்திகள்

பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்

Share

பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்

பொது நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் செய்தது சரியா என சனச வங்கியின் ஸ்தாபகர் கலாநிதி பீ.ஏ.கிரிவென்தெனிய கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற சனச தேசிய சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் முன்னிலையிலேயே அரசியல்வாதிகளை அவர் கடுமையாக சாடியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் பொதுமக்களிடம் கேட்ட அனைத்துமே மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், அரசாங்கத்திற்கு ஆறில் ஐந்து பலம் வழங்கப்பட்டது.

எனினும் இறுதியில் மக்களுக்கு என்ன கிடைக்கப்பெற்றது. உங்களில் இருந்து மாற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அகங்காரமாக செயல்படுகின்றனர்.

இது என்னுடைய கருத்து அல்ல. ஏன் அவர்களால் எளிமையாக நடந்து கொள்ள முடியாது? இந்த யாசக மனநிலையில் இருந்து மாற்றம் பெற வேண்டும். அரசியல்வாதிகள் மாற்றம் பெற்றாலே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...

1739443473 archuna
இலங்கைசெய்திகள்

சிங்களப் போர் வீரரால் காப்பாற்றப்பட்டேன்: இராமனாதன் அர்ச்சுனா – பாதுகாப்புப் படையினருக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியிருந்த தன்னைச் போர் வீரர்கள் காப்பாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

srilankaflood 532067014
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றம்: அரசாங்கம் கவனம்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான...

1734575149 1
இலங்கைசெய்திகள்

சீனாவின் அவசர நிதியுதவிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி!

அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச்...