tamilni 437 scaled
இலங்கைசெய்திகள்

பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்

Share

பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்

பொது நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் செய்தது சரியா என சனச வங்கியின் ஸ்தாபகர் கலாநிதி பீ.ஏ.கிரிவென்தெனிய கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற சனச தேசிய சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் முன்னிலையிலேயே அரசியல்வாதிகளை அவர் கடுமையாக சாடியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் பொதுமக்களிடம் கேட்ட அனைத்துமே மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், அரசாங்கத்திற்கு ஆறில் ஐந்து பலம் வழங்கப்பட்டது.

எனினும் இறுதியில் மக்களுக்கு என்ன கிடைக்கப்பெற்றது. உங்களில் இருந்து மாற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அகங்காரமாக செயல்படுகின்றனர்.

இது என்னுடைய கருத்து அல்ல. ஏன் அவர்களால் எளிமையாக நடந்து கொள்ள முடியாது? இந்த யாசக மனநிலையில் இருந்து மாற்றம் பெற வேண்டும். அரசியல்வாதிகள் மாற்றம் பெற்றாலே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...