24 6638fc09f3770
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள பொன்சேகா

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள பொன்சேகா

இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக பல சக்திகள் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தவேண்டும் என்ற விடயத்தில் சில சக்திகள் உறுதியாகவுள்ளமை புலனாகியுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடன் கடும் கரிசனத்திற்குரியவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...