24 66a62c6100727
இலங்கைசெய்திகள்

சஜித்தின் சகாக்கள் பலரும் ரணிலின் மேடையில் ஏறுவர் : மொட்டு எம்.பி. மகிந்தானந்த

Share

சஜித்தின் சகாக்கள் பலரும் ரணிலின் மேடையில் ஏறுவர் : மொட்டு எம்.பி. மகிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணையவுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார், அவர் ஓடிவிடுவார் எனச் சிலர் பிரசாரம் செய்தனர். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் வேட்பாளராகவே இந்த மேடையில் அமர்ந்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவர் பின்னால்தான் அனைத்து கட்சிகளும் இன்றுள்ளன.

நெருக்கடியான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்காத சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) வெற்றி வேட்பாளரா? இல்லை. நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் எமது மேடையிலேயே இருக்கின்றார். அடுத்துவரும் நாட்களில் சஜித்தின் சகாக்களும் எமது மேடையில் ஏறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...