24 66adcf03d0af1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக உருவாகும் இளம் அரசியல் கூட்டணி

Share

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குழு, இளைஞர் தலைமையுடன் தனிக் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இந்த புதிய கூட்டணியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை கவரும் அடையாளத்துடன் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமகால ஜனாதிபதியிடம், இந்த புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு அறிவித்திருந்தது.

இருந்த போதிலும், அந்த யோசனையை நிராகரித்த ஜனாதிபதி, இளம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு ஒரு இளம் அரசியல்வாதியை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவர் கூட்டணியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் ஆதரவாளர்களாக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுவார்கள். புதிய கூட்டணியின் அனைத்து பதவிகளும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியின் வெற்றியை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் செயற்பாட்டாளர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய கூட்டணி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வெளிவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மக்கள் ஐக்கிய முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...