3 26
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி போர்வீரர்களை இழிவுபடுத்துகின்றார்

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர்களை இழிவுபடுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

30 ஆண்டு கால போரையும் இயற்கை அனர்த்தத்தையும் ஒப்பீடு செய்ததன் மூலம் ஜனாதிபதியின் போர் பற்றிய புரிதல் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழையினால் ஏற்படக்கூடிய மண்சரிவிற்கு 30 ஆண்டுகளாக நீடித்த போர் வெற்றியை ஒப்பீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போர்வீரர்களை படைச் சிப்பாய்கள் சித்தரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் மட்டும் போர் வீரர்கள் போற்றப்படக் கூடாது எனவும் எந்தநாளும் அவர்கள் போற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி பிழையான தகவலை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

படலந்த அறிக்கையை பார்வையிட்டால் ஜே.வி.பி.யினர் எவ்வாறு படைவீரர்களை மதித்தார்கள் என்பது அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...