3 26
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி போர்வீரர்களை இழிவுபடுத்துகின்றார்

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர்களை இழிவுபடுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

30 ஆண்டு கால போரையும் இயற்கை அனர்த்தத்தையும் ஒப்பீடு செய்ததன் மூலம் ஜனாதிபதியின் போர் பற்றிய புரிதல் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழையினால் ஏற்படக்கூடிய மண்சரிவிற்கு 30 ஆண்டுகளாக நீடித்த போர் வெற்றியை ஒப்பீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போர்வீரர்களை படைச் சிப்பாய்கள் சித்தரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் மட்டும் போர் வீரர்கள் போற்றப்படக் கூடாது எனவும் எந்தநாளும் அவர்கள் போற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி பிழையான தகவலை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

படலந்த அறிக்கையை பார்வையிட்டால் ஜே.வி.பி.யினர் எவ்வாறு படைவீரர்களை மதித்தார்கள் என்பது அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...