Untitled 106
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு நிவாரணங்களை ஒருங்கிணைக்க தேசிய குழு நியமனம்: தலைவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர!

Share

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிவாரணங்கள் மற்றும் உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய குழு ஒன்றை நியமித்துள்ளதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று (டிசம்பர் 8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும்.

இந்தக் குழுவின் தலைவராகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் செயற்பாடுகள் நேற்று முதல் (டிசம்பர் 8, 2025) நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...