1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

Share

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் செயற்படுகிறது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஆணையை பெற்றுள்ளது. முதல் நாளில் 152 மன்றங்களிலும், மீதமுள்ள 115 மன்றங்களிலும் விரைவில் அதிகாரத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

உள்ளுராட்சி சபைகளில் எதிர்க்கட்சிக்கு ஆட்சி செய்யும் ஆணை இல்லை எனவும், சில கட்சிகள் ஒரு மன்றத்தில் ஒரு அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணைக்கு எதிராக உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...