1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

Share

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் செயற்படுகிறது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஆணையை பெற்றுள்ளது. முதல் நாளில் 152 மன்றங்களிலும், மீதமுள்ள 115 மன்றங்களிலும் விரைவில் அதிகாரத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

உள்ளுராட்சி சபைகளில் எதிர்க்கட்சிக்கு ஆட்சி செய்யும் ஆணை இல்லை எனவும், சில கட்சிகள் ஒரு மன்றத்தில் ஒரு அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணைக்கு எதிராக உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...