11 19
இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

Share

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

இலங்கையின்(sri lanka) 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நேற்று (24) தனது 56ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை மையமாக வைத்து நிறைவேற்றப்பட்ட இந்திய(india) இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1968 இல் பிறந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்து பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் உயர்தர படிப்பை தொடர்ந்தார்.

1992 இல், களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி பெற்ற அவர் 1995 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு செயல்பாட்டாளராக ஆனார். அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியான போராட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...