இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

Share
11 19
Share

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

இலங்கையின்(sri lanka) 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நேற்று (24) தனது 56ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை மையமாக வைத்து நிறைவேற்றப்பட்ட இந்திய(india) இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1968 இல் பிறந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்து பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் உயர்தர படிப்பை தொடர்ந்தார்.

1992 இல், களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி பெற்ற அவர் 1995 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு செயல்பாட்டாளராக ஆனார். அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியான போராட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...