12 34
இலங்கைசெய்திகள்

கொழும்பில் விசேட பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாராகும் பொலிஸார்

Share

கொழும்பில் விசேட பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாராகும் பொலிஸார்

இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பாடசாலை கிரிக்கெட் பிக் மேட்ச் என்ற மாபெரும் போட்டிகளின் நிமித்தம், பொலிஸ் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறியப்படுகிறது.

கொழும்பில் உள்ள பல முன்னணி விளையாட்டு வளாகங்கள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில், எதிர்வரும் வரும் மாதத்தில் 30 முன்னணி ஆண்கள் பாடசாலைகளின் 15க்கும் மேற்பட்ட பிக் மேட்ச் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதன்போது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்களின் பாதுகாப்புக்காகவும், சட்டவிரோத போதைப்பொருட்களைத் தடுக்கவும், அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் , குற்றவாளிகளைக் கைது செய்ய கணிசமான எண்ணிக்கையிலான பொலிஸார் சாதாரண உடையில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...