14 29
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலய கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.

2013 வடக்கு மாகாண சபை அமைந்த பின் அப்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பா.கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே அது கூட சாத்தியப்பட்டது.

அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனை வடக்குமாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கைக்கும் எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ளது.

அதே நேரம் 2018 இன் பின்னர் வடக்குமாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள போட்டி பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000ரூபாக்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்குமாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனர். இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதோடு முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ்மக்கள் வாக்களித்து 05ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...