2 40
இலங்கைசெய்திகள்

வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

Share

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் காலத்தில் மொட்டுக் கட்சி, தொலைபேசி கட்சி, யானைக் கட்சி என்பன ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டன.

தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஊழலில் ஈடுபடக் கூட்டுச் சேர்கின்றன.

அந்தக் கட்சிகளின் போலி நாடகம், போலி முகத்திரை மக்களுக்குத் தெரியும். அப்படிச் சபையை அமைத்தால்கூட ஓரிரு வாரங்களுக்குக் கூட சபையை இவர்களால் நடத்த முடியாது.

தவிசாளர், உப தவிசாளர் அதிகாரப் போட்டியிலேயே காலம் சென்றுவிடும். எனவே, தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும். தவிசாளர்கூட எமது கட்சியைச் சார்ந்தவரே நியமிக்கப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...