12 2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்கள் வியானி குணதிலக்கவிற்கு..!

Share

பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்கள் வியானி குணதிலக்கவிற்கு..!

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தமக்கு உத்தியோகபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்காக பொலிஸ் மா அதிபரின் அனைத்துக் கடமைகளையும் தன்னால் செய்ய முடியும் என்பதை தாம் உறுதிப்படுத்தியதாகவும் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட அனைத்து பொலிஸ் உத்தரவுகளும், தேர்தல் தொடர்பான கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துதல், தேர்தல் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள், தளவாட தேவைகளை வழங்குதல் போன்ற ஏற்பாடுகள் ஆகியவை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தேர்தல் தொடர்பான தேவைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாக குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...