2 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா…!

Share

இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) பலவீனமான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில பலம் வாய்ந்த நாடுகள் இலங்கையில் பலவீனமான அரசாங்கத்தையே விரும்புகின்றன. மேலும், பலவீனமான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது இந்த நாடுகள் இலங்கையில் இருந்து தாம் விரும்பியதை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.

ராஜித சேனாரத்ன சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் அண்மையில் ரணில் விக்ரமசிங்க பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....