20 8
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு

Share

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச கூறியுள்ளார்.

இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே.

உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அந்த மாற்றத்தை உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும்.” என தனது விசேட உரையில் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஒருவர் இன்று அல்லது இந்த வாரத்தில் பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அமைச்சர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தில் இவ்வாறு தனது பதவி விலகல் செய்ய உள்ளார் என கூறப்படுகின்றது.

தேர்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றியதன் பின்னர் அவர் தனது பதவி விலகல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...