20 8
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு

Share

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச கூறியுள்ளார்.

இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே.

உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அந்த மாற்றத்தை உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும்.” என தனது விசேட உரையில் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஒருவர் இன்று அல்லது இந்த வாரத்தில் பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அமைச்சர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தில் இவ்வாறு தனது பதவி விலகல் செய்ய உள்ளார் என கூறப்படுகின்றது.

தேர்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றியதன் பின்னர் அவர் தனது பதவி விலகல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...