6 17
இலங்கைசெய்திகள்

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

Share

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை கடையொன்றில் இன்று (09) ஏற்பட்ட மின்தடை காரணமாக மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் குறித்த கடையில் இருந்து ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் 25-35 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...