6 17
இலங்கைசெய்திகள்

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

Share

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை கடையொன்றில் இன்று (09) ஏற்பட்ட மின்தடை காரணமாக மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் குறித்த கடையில் இருந்து ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் 25-35 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...