17 15
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் : பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

Share

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் : பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் பாதுகாப்புக்காக 54,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...