18 3
இலங்கைசெய்திகள்

அநுர அரசிலும் தொடரும் அதிகார துஷ்பிரயோகம் – கட்சியால் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்திலும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் விவாதித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகள் குழு மீது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மே தின பேரணிகளில் பங்கேற்ற மக்களை ஏற்றிச் சென்ற சுமார் 20 பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் குருந்துகஹஹெதப்ம பகுதியில் நிறுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத மஹிந்தசிறி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகளை நிறுத்த அனுமதித்த பல பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் பயணித்த மக்களின் செயற்பாடு கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளை நிறுத்தி, உணவருந்தியதுடன், மது அருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த முறையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை எனவும் இந்த நடைமுறையை நிறுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸதார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...