18 3
இலங்கைசெய்திகள்

அநுர அரசிலும் தொடரும் அதிகார துஷ்பிரயோகம் – கட்சியால் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்திலும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் விவாதித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகள் குழு மீது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மே தின பேரணிகளில் பங்கேற்ற மக்களை ஏற்றிச் சென்ற சுமார் 20 பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் குருந்துகஹஹெதப்ம பகுதியில் நிறுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத மஹிந்தசிறி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகளை நிறுத்த அனுமதித்த பல பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் பயணித்த மக்களின் செயற்பாடு கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளை நிறுத்தி, உணவருந்தியதுடன், மது அருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த முறையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை எனவும் இந்த நடைமுறையை நிறுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸதார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....