12 26
இலங்கைசெய்திகள்

ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது

Share

ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது

ஓய்வு பெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ அதிகாரி இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய போர்முனைக்கு அனுப்பும் இடைத்தரகராக செயற்பட்டு அதற்காக பாரிய தொகையொன்றை தரகுப் பணமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்காக அவர் பல்வேறு தடவைகள் நேரடியாக ரஷ்யாவுக்கு சென்று ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து அனுப்பப்படும் ஓய்வுபெற்ற ஒரு இராணுவ அதிகாரிக்கு 25 இலட்சம் ரூபா வீதம் குறித்த இராணுவ அதிகாரிக்கு தரகுப் பணமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் அறியமுடிகின்றது.

இலங்கையின் முக்கிய தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பெயரில் ரஷ்யாவில் முகாம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருவதுடன், இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினர் அங்கு ஒருவார கால பயிற்சியின் பின்னர் ரஷ்யாவின் போர்முனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றை வகித்து அண்மையில் ஓய்வு பெற்ற குறித்த இராணுவ அதிகாரியிடம் இந்த விடயங்கள் குறித்து இரண்டொரு நாட்களில் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

அதன் பின்னர், பெரும்பாலும் குறித்த அதிகாரி கைது செய்யப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...