7 58
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் –  இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளனர்.

இதேவேளை, தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...