7 58
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் –  இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளனர்.

இதேவேளை, தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...