இலங்கையை உலுக்கிய விபத்து! பேருந்தில் பயணித்த நபரின் திகில் அனுபவம்
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய விபத்து! பேருந்தில் பயணித்த நபரின் திகில் அனுபவம்

Share

இலங்கையை உலுக்கிய விபத்து! பேருந்தில் பயணித்த நபரின் திகில் அனுபவம்

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விபத்திலிருந்து உயிர் தப்பிய இளைஞரொருவர் விபத்து தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி சென்ற பேருந்தில் நாங்கள் பயணித்தோம். பேருந்தில் 50 பேர் வரையிலானோர் இருந்தனர்.

சுமார் பத்து பேர் பேருந்தில் நின்றுகொண்டு பயணித்தனர். 7.30 மணியளவில் பேருந்து பயணம் ஆரம்பமானதுடன் பேருந்து வேகமாகவே பயணித்தது.

விபத்து இடம்பெற்ற பாலத்திற்கு அருகில் வந்த போது பேருந்தின் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டது. அத்துடன் பேருந்து பாலத்திலிருந்து நீருக்குள் விழுந்தது. நான் ஜன்னல் ஓரத்திலேயே அமர்ந்திருந்தேன்.

இந்த நிலையில் நான் தான் முதலில் வெளியில் வந்தேன். சுமார் 5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பலர் சுயநினைவின்றி இருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த பேருந்திற்கு பயணிகள் போக்குவரத்துக்கான முறையான உரிமம் இல்லை என்றும் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...